Friday, August 31, 2012

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, August 31, 2012
இலங்கை::பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகள் மாநாட்டில் கலநது கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாடுகளின் உள்விவகாரங்களில் உலக நாடுகள்தலையீடு செய்யக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கி;ய நாடுகள் பிரகடனம் மற்றும் அணிசேரா நாடுகள் பிரகடனத்திலும் இதுவே வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாடு பாரியளவில் அபிவிருத்தியை எட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான நிலைப்பாட்டுடன் செயற்பட்ட காரணத்தினால்3 தசாப்த யுத்தத்தை இல்லாதொழிக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சமாதானம் - பாதுகாப்பை முன்னேற்றவும் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்புகளைபயங்கரவாதத்தை ஒழிக்கவும் வழங்கும் :
பயங்கரவாதத்தை ஒழிக்கவும் சமாதானம் மற்றும் பாதுகாப்பை முன்னேற்றவும் மேற்கொள்ளப்படும் பல் தரப்பட்ட முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானின் டெஹ்ரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 16 வது உச்சி மாநாட்டில் நேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

டெஹ்ரானில் நேற்று ஆரம்பமான அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கான ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கியதுடன் நேற்று மாலை உரையாற்றினார்.

மனித இனத்தின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தடையேற்படுத்தும் தேசிய எல்லைகளை கடந்த அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுடன் நெருங்கிய தொடர்புள்ள சர்வதேச பயங்கரவாதத்தை உலகம் எதிர்நோக்கி வருகிறது.

தெளிவான கொள்கை ஒன்றின் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத சவால்களை இலங்கையால் முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. இவ்வாறன அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வரவும் அதன் பின்னரான பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெற்றிக்கொள்ளவும் இலங்கையை போன்று, தம்மால் உருவாக்கப்பட்ட மற்றும் மக்களை அடிப்படையாக கொண்ட செயற்திட்டங்கள் அவசியம். அத்துடன் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள நாடுகளுக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது கட்டாயம். இந்த அனர்த்ததை இல்லாதொழிக்க வேண்டுமாயின் இரட்டை கொள்கைகள் அல்லது ஒரு தரப்பிற்கு மாத்திரம் சாதகமான கொள்கைள் இருக்கக் கூடாது.

இறையாண்மையை மதிக்க வேண்டும் என்ற கொள்கைளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அனைவரும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மற்றும் அணிசேரா நாடகளின் கொள்கைகளில், நாடுகளில் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிரந்தரமான கொள்கையானது வாரத்தைகளில் மாத்திரம் இருக்கக் கூடாது. அதனை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment