Thursday, August 30, 2012

மாணவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கற்பிரயோகம்; ஆறு பொலிஸாருக்கு காயம் - பொலிஸ்!

Thursday, August 30, 2012
இலங்கை::பல்கலைக்கழக மாணவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மையில் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின்போது பொலிஸார் மீது கற்பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மருதானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த கற்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமமடைந்தவர்களில் ஐந்து பேர் சிகிச்சையின் பின்னர் வைத்தியாசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸார் மீது கற்பிரயோகம் மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment