Tuesday, July 24, 2012

புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த சவூதி அல்-ராஜ் வங்கிக்கு UK யின் பிரபல சர்வதேச வங்கி நிதியுதவி!

Tuesday, July 24, 2012
புலிகளுடன் சமூக தொடர்புகளை கொண்டிருந்த சவூதி அரேபியாவின் அல்-ராஜ் வங்கிக்கு, பிரித்தானியாவில் உள்ள பிரபலமான சர்வதேச வங்கி ஒன்று, நிதியுதவி வழங்கியிருப்பதாக அமெரிக்கா செனட் சபையின் நிரந்திர உபக்குழு நடத்திய விசேட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கையின் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பிரித்தானிய வங்கி, 2009 ஆம் ஆண்டு அல்-ராஜ் வங்கிக்கு நிதியுதவியை வழங்கியிருப்பதாக செனட் சபையின் உபக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்- ராஜ் வங்கி, புலிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

லண்டன் நகரை மையமாக கொண்டு இயங்கும் மேற்படி சர்வதேச வங்கி, எதனையும் தேடிபார்க்காமல், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாகவும் செனட் உபக்குழு குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment