Thursday, July 26, 2012

நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் கைது!

Thursday, July 26, 2012
இலங்கை::அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அதிகாரி ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கிருந்து இந்த நபரை பொறுப்பேற்று அழைத்து வந்ததாக குடிவரவு - குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ச்சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு - குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் கூறினார்.

போலி கடவுச்சீட்டுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்ததை இந்த சந்தேகநபர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment