Thursday, July 26, 2012

6வது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரம் 5 மனைவிகள் சேர்ந்து ‘சீரழித்த’தால் மூச்சு திணறி கணவன் பரிதாப சாவு!

Thursday, July 26, 2012
அபுஜா::ஆறாவது மனைவியுடன் கணவன் உல்லாசமாக இருந்ததால் ஆத்திரமடைந்த 5 மனைவிகளும் சேர்ந்து வலுக்கட்டாயமாக கணவனை பலாத்காரம் செய்து கொன்றனர். நைஜீரியாவில் கத்திமுனையில் நடந்த இந்த பயங்கரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியாவின் ஓக்பேடிபோ கிராமத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும் தொழிலதிபர். இவருக்கு 5 மனைவிகள். ஆறாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த இளம்பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் 5 மனைவிகளுக்கும் பொறாமை ஏற்பட்டது. கடந்த வாரம், வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஒனோஜா நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்றார். அங்கு அவருடன் உல்லாசமாக இருந்தார்.

இதனால், மற்ற 5 மனைவிகளும் ஆத்திரம் அடைந்தனர். கத்தி, கம்புகளை எடுத்து கொண்டு அந்த அறைக்குள் ஆவேசமாக நுழைந்தனர். ‘‘புதிதாக ஒருத்தி வந்ததும் நாங்கள் பழசாகிப்போய்விட்டோமா. எங்களுடனும் உல்லாசமாக இரு’’ என்று கூறி மிரட்டினர். அவர்களை சமாதானப்படுத்த ஒனோஜா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. வலுக்கட்டாயமாக கத்தி முனையில் மிரட்டி அவருடன் 4 மனைவிகளும் உறவுகொண்டனர். 5வது மனைவியுடன் உறவுகொள்ளும் நேரத்தில் மயங்கி விழுந்த ஒனோஜா படுக்கையிலேயே சரிந்து இறந்தார். அதை பார்த்த 5 மனைவிகளும் தப்பியோடி விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காட்டுக்குள் தப்பியோடிய 2 பெண்களை கைது செய்தனர். மற்ற 3 பெண்களை தேடி வருகின்றனர். இந்த தகவலை நைஜீரியாவில் இருந்து வெளிவரும் தி டெய்லி போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment