Wednesday, July 4, 2012

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கை உயர் ராஜதந்திரிகளுக்கு விசேடபயிற்சி!

Wednesday,July 04, 2012
இலங்கை::வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கை உயர் ராஜதந்திரிகளுக்கு விசேடபயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கஉள்ளனர்.

தியதலாவை இராணுவ பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 7ம் மற்றும் 8ம்திகதிகளில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.

நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில்தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

இராஜதந்திரிகளுக்கு விசேட கல்விச் சுற்றுலா ஒன்றையும் வெளிவிவகாரஅமைச்சு ஒழுங்கு செய்துள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இராஜதந்திரிகள்மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள உள்ளனர்.

நாட்டின் நன்மதிப்பை சர்வதேச ரீதியில் மேம்படுத்தும் நோக்கில்பயிற்சி மற்றும் கல்விச் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment