Thursday, July 05, 2012இலங்கை::இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் பத்துப் பேர் இரண்டு படகுகளுடன் நாடு திரும்பவுள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து இந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடலுக்குச் சென்றிருந்தனர்.
கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மீனவர்கள் பத்துப் பேரும் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை இன்றும் 11 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகளும் அந்த நாட்டின் பொறுப்பில் உள்ளதாக கடற்தொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.
No comments:
Post a Comment