Thursday, July 5, 2012

சாட்டிலைட் போன்' பறிமுதல்: இலங்கை வாலிபர்கள் கைது!

Thursday, July 05, 2012
சென்னை::சாட்டிலைட் போன்' வைத்திருந்த இலங்கை வாலிபர்களை, கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை புழலில் இலங்கை அகதிகள் முகாமில் மோகன், சுரேஷ் ஆகியோர் தங்கியுள்ளனர். இவர்கள், சக அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு, கள்ள தோணியில் அனுப்புவதாகக் கூறி, ஆறு லட்ச ரூபாய் வசூலித்தனர். பணத்தை வசூலித்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பாமல் ஏமாற்றினர். இதுகுறித்து, பணத்தை இழந்தவர்கள், கியூ பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புழல் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். அதில், இலங்கை அகதிகள் சுரேஷ், மோகன் ஆகியோரிடம் இருந்த, "சாட்டிலைட் போனை' பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் உள்ள அவர்களது கூட்டாளிகளிடம் இருந்து கள்ள தோணியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, இலங்கை வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment