Saturday, July 7, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்கேற்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது!

Saturday, July 07, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்கேற்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும்நோக்கில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத்திட்டத்தில் கூட்டமைப்பினர் இணைந்து கொள்வார்கள் என நம்புவதாக ஊடக அமைச்சர் கெஹலியரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் எப்போதும் கலந்து கொள்ள முடியும், அதற்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்காலை ஒன்றையும் மாலையில் வேறு ஒன்றையும் தெரிவிக்கும் பழக்கத்தை உடையவர்கள் என அவர்குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்ஷிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பியகேள்விக்கு பதிலளித்த போது, கூட்டமைப்பினர் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டு வருவதாககெஹலிய குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறெனினும், தேசிய இனப்பிரச்சினைக்குதீர்வு காணும் முனைப்புக்களில் கூட்டமைப்பினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகக்குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment