Saturday, July 7, 2012

இலங்கை விமானப்படையினர் வெளியேற்றப்படவில்லை - வெளிவிவகார அமைச்சு!

Saturday, July 07, 2012
இலங்கை::சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டிருந்த இலங்கை விமானப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இந்தியாவில் இலங்கை விமானப்படையினர் தமது பயிற்சிகளை தொடர்ந்தும் பெற்று வருவதாக அமைச்சு குறிப்பிடுகிறது.

சென்னையில் ஒரு கட்ட பயிற்சி நடவடிக்கைகள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி இலங்கை விமானப்படையினர் தற்போது பெங்களூர் நகரில் பயிற்சிகளை பெற்று வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சென்னை - தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சிகளை பெற்று வந்த இலங்கை விமானப்படையினர் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment