Wednesday, July 4, 2012

போராட்டம் மிகப் பெரிய வெற்றி : ஸ்டாலின் பேட்டி:-திமுக அறப்போராட்டம் பிரம்மாண்ட வெற்றி : கருணாநிதி!

Wednesday,July 04, 2012
சென்னை::திமுக நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் எதிர்பார்த்ததைவிட எழுச்சியாக நடந்துள்ளது. இது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொளத்தூர் பகுதியில் நடந்த மறியலில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதுவே, எங்களுக்கு பெரிய வெற்றியை தேடித் தந்துவிட்டது. அதற்காக காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கருணாநிதியின் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களின் எதிர்பார்ப்பையும் மீறி போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. கைதாகியுள்ள எங்கள் மீது இந்த அரசு எத்தனை பிரிவுகளில் வழக்கு போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் யாரும் ஜாமீன் கேட்க மாட்டோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார். சிறைக்கு செல்ல தயாராக பெட்ஷீட், துணிகள் கொண்ட பெட்டியை ஸ்டாலின் எடுத்து வந்திருந்தார்.

ஸ்டாலினை வாழ்த்திய கருணாநிதி : போராட்டத்துக்கு செல்லும் முன்பு கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்தார். அவருக்கு கருணாநிதியும் சால்வை அணிவித்து வாழ்த்து வழியனுப்பி வைத்தார்...

திமுக அறப்போராட்டம் பிரம்மாண்ட வெற்றி : கருணாநிதி!

சென்னை: அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக நடத்திய, அறப்போராட்டம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக திருந்தும், என்ற நம்பிக்கை இல்லை என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். எழுச்சியுடன் நடைபெற்ற அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்கள், மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றதாக கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment