Saturday, July 7, 2012

எந்தவொரு இலங்கை ராஜதந்திரியும் சந்திக்காத சவீடனின் வெளிவிவகார அமைச்சரை, புதிய இலங்கைத் தூதுவர் சந்திப்பு!

Saturday, July 07, 2012
கடந்த பல வருடங்களாக எந்தவொரு இலங்கை ராஜதந்திரியும் சந்திக்காத சவீடனின் வெளிவிவகார அமைச்சரை சுவீடனில் புதிய இலங்கைத் தூதுவர் ஒஸ்டீ அழகப்பெரும சந்தித்துள்ளார். புதிய தூதுவர் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

சுவீடன் வெளிவிவகார அமைச்சில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நட்புறவு ரீதியல் நடைபெற்றன. சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கால் பில்டிட் இந்த உறவுகள் பலமடையுமென தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தில் இலங்கை அடைந்து வரும் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளின் முன்னேற்றம், இனங்களுக்கு இடையிலான நட்புறவு போன்றவை தொடர்பாக அரசு கவனம் செலுத்துவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேற்குலகம் அதற்கு பொறுமையாக ஆதரவளிக்க வேண்டுமெனவும் தூதுவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment