Saturday, July 7, 2012

வவுனியா சம்பவத்தால் முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லை:தமிழ் கைதிகள் விசாரணைகளை துரிதப்படுத்த விசேட நீதிமன்றங்கள்!

Saturday, July 07, 2012
இலங்கை::தமிழ் கைதி களுக்கு எதிரான வழக்கு விசார ணைகளை துரித மாக முன்னெ டுப்பதற்காக மூன்று விசேட நீதிமன்றங்களை அமைக்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள தோடு இந்த மாதத்தில் இவர்களுக் கெதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிரி கஜதீர கூறினார். புனர்வாழ்வு பெற விருப்பமானவர்களு க்கு புனர்வாழ்வு வழங்கவும் ஏனை யவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வவுனியா சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, புலிச் சந்தேக நபர்கள் 3 சிறைச்சாலை அதிகாரிகளை பணயக் கைதிகளாக தடுத்து வைத்ததால் தான் வவுனியா சிறையில் குழப்பம் ஏற்பட் டது.

நீதிமன்ற உத்தரவின்படி வேறு சிறைக்கு இடமாற்றப்படவிருந்த புலி சந்தேக நபர்கள் சிலரை மீளவும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு கோரியே புலிகள் குழப்பம் ஏற்படுத் தினர். சிறை அதிகாரிகளினால் புலி சந் தேக நபர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. இந்த நிலையிலே விசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்புடன் சிறை அதிகாரிகள் மீட்கப்பட்டனர். துப்பாக்கியோ ரவையோ பயன்படுத்தாமலே இவர்கள் மீட்கப்பட்டனர். பல்வேறு ஆயுதங்கள், வெளிநாடுகளுக்கு பேசும் தொலைபேசிகள் உடனே புலி சந்தேக நபர்கள் இருந்ததன் மூலம் இந்த நடவடிக்கையின் பயங்கரம் தெளிவாகிறது.

எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. ஒரு கைதி இறந்துள்ளதால் இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் நீதவானின் தீர்ப்பு இதுவரை வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகிறது. எனவே இந்த மரணம் குறித்து முன்கூட்டி எந்த வித முடிவுக்கும் வர முடியாது. இவர் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் உண்மை வெளியாகும். இறந்தவரின் சடலத்தை உறவினர்கள் கோரியுள்ளதாக கூறப்பட்டபோதும் சடலத்தை ஏற்க யாராவது முன்வரவேண்டும். எனக்குத் தெரிந்தளவில் இதுவரை யாரும் சடலத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. அமைச்சு மட்டத்திலும் குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தகவல் திரட்டப்படுகிறது. எந்த கைதிக்கும் எதுவித அநியாயமும் ஏற்படுத்தாதிருக்க எமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா சம்பவத்தின் மூலம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாது. தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வழக்குகளை விசாரணை செய்வதற்கு மூன்று விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

புனர்வாழ்வு பெற விரும்பும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் ஏனையவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இரா சம்பந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்றுகையில் கூறியதாவது;

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பல கைதிகள் காயமடைந்தனர். இறந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை. இவரின் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றுவதற்காக சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஒரு மாத காலத்தினுள் தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணை அல்லது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது.

இந்த நிலையிலே வவுனியா சம்பவம் நடந்துள்ளது. எனவே மேலும் பலரை கொல்லாது. தமிழ் கைதிகளை மன்னித்து விடுதலை செய்யுமாறு கோருகிறேன்.

No comments:

Post a Comment