Friday, July 6, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: கருணாநிதிக்கு பிரதமர் மன்மோன்சிங் பதில் கடிதம்!

Friday, July 06, 2012
சென்னை::இலங்கை தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய அவசியம் குறித்து, இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன்' என, பிரதமர் மன்மோன்சிங், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு, மன்மோகன்சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா பேச்சு தொடர்பாக, கடந்த மாதம் 20ம்தேதியிட்ட தங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. கடந்த மாதம் 21ம்தேதி ரியோடி ஜெனிரோ மாநாட்டில், இலங்கை அதிபரை சந்தித்தேன். அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாகவும், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பதற்காக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசினேன். தமிழர் பிரச்னைக்கு இலங்கைக்கு உள்ளேயே தகுந்த அரசியல் தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் குறித்து, இலங்கை அதிபரிடம் வலியுறுத்தினேன். அதுதான் இலங்கை தமிழர்கள் கவுரமான வாழ்க்கை வாழவும், சொந்த வீட்டில் வசிப்பது போன்ற உணர்வைப் பெறவும், போதுமான நடவடிக்கையாக அமையும் என்று இலங்கை அதிபரிடம் தெரிவித்தேன். இவ்வாறு மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment