Friday, July 06, 2012இலங்கை::கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் கணிசமானளவு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் சுமார் 700 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறியுள்ளார்.
இது கடந்த வருடத்தின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் இது ஐந்து வீத அதிகரிப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தவிர பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 975 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இளம்வயது பெண்களே அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறிப்பாக பெற்றோரும் பாதுகாவலர்களும் அதிக கவனம் செலுத்தி செயற்பட வேண்டும் என பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment