Wednesday, July 18, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் 14 பேர் கைது!

Wednesday,July 18,2012
இலங்கை::கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்குடா மற்றும் திருகோணமலை ஆகிய கடல் பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு, வெளிநாடு செல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 334 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து நேற்றைய தினம் 41 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனைத்தவிர கல்குடா பகுதியில் வைத்து கடந்த 13 ஆம் திகதி 109 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட 61 பேர் கடந்த வியாழக்கிழமை திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment