Thursday, June 28, 2012இலங்கை::மனித உரிமை செயற்திட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இன்றி தொடர்ச்சியான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடானது காயங்களை பெரிதுபடுத்துமே தவிர, ஆக்கபூர்வமான தீர்வுகளை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
95 வீதமான இடம்பெயர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment