Wednesday, June 20, 2012

லெபனான் செல்லும் இலங்கை இராணுவம்!

Wednesday, 20th of June 2012
இலங்கை::லெபனானின் அமைதிகாக்கும் பணிகளுக்காக 150 இராணுவ வீரர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது.

இந்தக் குழுவில் 10 உத்தியோகத்தர்கள் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, ஹெய்ட்டியின் அமைதிகாக்கும் பணிகளுக்கு 7 உத்தியோகத்தர்களும், 111 இராணுவத்தினரும் அடுத்தமாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment