Thursday, June 28, 2012கனடா, சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளைதுரிதப்படுத்த தீர்மானித்துள்ளது.
சன் சீ கப்பல் ஊடாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள ;கனடாவிற்குள் பிரவேசித்தமை தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு கனேடியர்களும், நான்கு இலங்கையர்களும் இவ்வாறுகுற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளஆறு பேருக்கு எதிரான விசாரணைகளையும் துரிதப்படுத்த அந்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது ஒரு மில்லியன் கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படக் கூடும்என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் ஆர்வம் மற்றும் அரசியல் விவகாரம் ஆகியவற்றின் காரணமாகவழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு எம்.வீ. சன் சீ கப்பலின் ஊடாக 492 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவைச் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment