Wednesday,June,13,2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுடனான அரசியல் தொடர்புகளை துண்டித்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே வழங்கிய ஆலோசனையை அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நிராகரித்துள்ளார்.
ரங்கே பண்டாரவை நேற்று (12) தொலைபேசியில் தொடர்புக்கொண்ட, தயா கமகே இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
”ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைவர் ஒருவர் இருக்கின்றார். நாம் தலைவர் சொல்வதை கேட்க வேண்டும். சரத் பொன்சேக்காவின் பின்னால் செல்ல வேண்டாம்” என தயா கமமேக ரங்கே பண்டாரவிடம் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரங்கே பண்டார,
”சரத் பொன்சேக்கா எனது பழைய நண்பர். எவரோ கூறுகின்றனர் என்பதற்காக அவருடனான நட்பை நிறுத்த முடியாது” என பதிலளித்துள்ளார்.
அத்துடன் பொன்சேக்கா, சாதாரண தலைவர் அல்ல எனவும் அவர் இராணுவத் தலைவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பாலித்த ரங்கே பண்டார பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment