Friday, June 29, 2012

அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன!

Friday, June, 29, 2012
இலங்கை::அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன.

நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ள படகில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர். இப் படகுகள் இலங்கையில் இருந்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் இப்படகுகள் கைப்பற்றப்பட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று அதிகாலை மேலும் ஒரு படகு அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 30 கடல் மைல்கள் தொலைவில் இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தப் படகில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 93 பேர் இருந்துள்ளனர். இவர்களும் இலங்கையர்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment