Sunday, June, 17, 2012இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகளை சர்வதேச மன்னிப்புச்சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அமர்வுகளில் ஒரு அறிக்கையும், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில்மற்றுமொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் இல்லாதொழிக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள்மனித உரிமைப் பேரவையின் கால மீளாய்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தேசிய மனித உரிமைப பேரவையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தநடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமைநீடிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாற்றுக்கருத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் எதிரிகள் கால வரையறையின்றி சிறைகளில்தடுத்து வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலவந்தமான கடத்தல்கள், காணாமல்போதல்கள், சித்திரவதைச்சம்பவங்கள், மனித உரிமை மிறல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக்குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமை இலங்கையில்தொடர்ந்தும் நீடித்தால், அரசாங்கம் அதனைத் தடுத்த நிறுத்தத் தவறினால் ஐக்கிய நாடுகள்அமைப்பு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேசமன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment