Wednesday, June 27, 2012

சுற்றுலா விசாவில் வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் புத்தளம் - அநுராதபுரம் வீதி ரயில் கடவைக்கு முன்னால் கைது!

Wednesday,June 27, 2012
இலங்கை::சுற்றுலா விசாவில் வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் புத்தளம் - அநுராதபுரம் வீதி ரயில் கடவைக்கு முன்னால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸாரால் இன்று காலை 11 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் புத்தூர் - காரைக்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த புத்தளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம் 21 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம் 21 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு ஊழல் மோசடி விசாரணைப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பதில் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சுஜீவ மெதவத்த – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி பொலிஸ் அதிகாரிகளால் கப்பமாகப் பெறப்பட்ட 21 இலட்சம் ரூபாவும் அவர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்...

பிரித்தானியப் பெண்ணொருவர் செல்லுபடியாகக்கூடிய விஸா மற்றும் கடவுச்சீட்டு அற்ற நிலையில் கண்டி பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

No comments:

Post a Comment