Friday, June 29, 2012

புலிக்கு பிள்ளைகளை பாடசாலைகளில் பிடித்து கொடுத்த (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது 4ம் மாடியில் விசேட விசாரணை!

Friday, June, 29, 2012
இலங்கை::புலிக்கு பிள்ளைகளை பாடசாலைகளில் பிடித்து கொடுத்த (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது 4ம் மாடியில் விசேட விசாரணை:-

தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை நான்காம் மாடியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

புலம்பெயர் (புலி)தமிழர்களினால் இயக்கப்படும் (புலி)தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த 'சமகால அரசியல் நிலைமைகள்' குறித்த செவ்வியொன்று தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டதாக (புலி)சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து தான் நான்காம் மாடிக்குச் சென்றதாகவும் அங்கு சுமார் 3 மணித்தியாலங்கள் வரை தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

புலம்பெயர் (புலி)தமிழர்களினால் இயக்கப்படும் (புலி)தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் அவ்விடயங்கள் இலங்கையின் இறையாண்மையினை பாதிப்பவையாக அமைந்துள்ளன எனவும் தன்னிடம் விசாரணை நடத்தியவர்கள் குறிப்பிட்டதாக (புலி)சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார்.

இதன்போது தன்னை ஒரு புலி உறுப்பினராகவும் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவிகள் செய்பவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் அவர் மேலும் கூறினார்...

இந்த விசாரணையின் போது குறித்த செவ்வி தொடர்பாகவும், வெளிநாட்டு விஜயங்கள், வெளிநாட்டு தூதுவராலையங்களுடன் உள்ள உறவுகள், புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்கள் பற்றிய பல தரப்பட்ட கேள்விகளுடன் கடந்தகாலத்தில் புலிகளுக்கும் அவருக்கும் தொடர்பிருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக (புலி)சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசாரனை தொடரும் எனத் தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர் அழைக்கும் போது விசாரனைக்கு சமூகம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment