Thursday, May 31, 2012

இல.கணேச‌ன், பொ‌ன்.ரா‌தா‌கி‌ரு‌ஷ்ண‌ன் கைது!

Thursday,May,31,2012
செ‌ன்னை::பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட பா.ஜ.க. மா‌நில தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், மு‌ன்னா‌ள் தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்பட 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை அ‌ண்மை‌யி‌ல் ம‌த்‌‌திய அரசு ‌லி‌ட்டரு‌க்கு ரூ.7.50 காசு உய‌ர்‌த்‌தியது. இ‌ந்த ‌விலை உய‌ர்வை ‌திரு‌ம்ப பெற வ‌‌லியுறு‌த்‌தி நாடு தழு‌‌விய வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ற்கு பா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள் அழை‌ப்பு ‌விடு‌த்தன.

இதையடு‌த்து த‌மிழக‌ம் உ‌ள்பட நாடு முழுவது‌ம் இ‌ன்று முழு அடை‌ப்பு நட‌ந்து வரு‌கிறது. ஆனா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் கோவை, ‌திரு‌ப்பூ‌ர், ஈரோ‌ட்டை த‌விர பெ‌ரிய அள‌வி‌ல் பா‌தி‌ப்பு இ‌ல்லை.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை அ‌ண்ணாசாலை‌யி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்ய மு‌ய‌ன்ற பா.ஜ.க. மா‌நில தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், மு‌ன்னா‌ள் தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்பட 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

செ‌ன்னை தா‌ம்பர‌ம் இர‌‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த 50 பா.ஜ.க.‌வினரு‌ம், ‌‌திரு‌வ‌ள்ளூ‌‌ர் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌நி‌ன்றவூ‌ரி‌ல் இர‌யி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சியை சே‌ர்‌ந்த 50 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் இர‌யி‌‌லி‌ல் ஈடுப‌ட்ட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 100 பே‌ர் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

No comments:

Post a Comment