Thursday, May 31, 2012

சிங்கப்பூர் இலங்கைக்கிடையில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் சுற்றுலாத் துறையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஆரம்பமான சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக சங்கத்தின் மாநாட்டிலும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமையும், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

No comments:

Post a Comment