Thursday, May 24, 2012

நாட்டில் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது ஆனால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும் - சரத்பொன்சேகா!

Thursday, May, 24, 2012
இலங்கை::நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கு இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் செல்லும் என சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். "என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் அரசியலில் ஈடுபட முடியும்'' என சரத் பொன்சேகா ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள தொலைபேசி செவ்வியில் தெரிவித்துள்ளார்.

என்னால் மக்களுக்குக் கற்பிக்க முடியும். என்னால் மக்கள் மத்தியில் உரையாற்ற முடியும். கூட்டங்களை நடத்த முடியும். இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து மற்றுமொரு அரசாங்கத்தை ஏற்படுத்தி மக்களின் நலன் காக்க என்னால் முடியும்'' இவ்வாறு சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மேலும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே தனக்கு விடுதலை கிடைத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment