Sunday, May 20, 2012

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் பெண் ஒருவர் கைது!

Sunday, May, 20, 2012
இலங்கை::இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் - முள்ளிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 87 கஞ்சா பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment