Tuesday, May 1, 2012

இந்திய கடற்படை, விமானப்படைக்கு பிரத்யேக செயற்கைகோள் - ராணுவ அமைச்சர் அந்தோணி!

Tuesday, May, 01, 2012
புதுடில்லி:கடற்படை மற்றும் விமானப்படைக்காக பிரத்யேக செயற்கைக்கோள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏவப்படும்,'' என, ராபுதுடில்லி:ணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் மேலும் கூறியதாவது:கடற்படைக்கான செயற்கைக்கோள், 2012-13ம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. விமானப்படைக்கான பிரத்யேக செயற்கைக்கோள் 2013-14ம் ஆண்டில் செலுத்தப்படும். மிக்-29மிரேஜ் - 2000, ஜாகுவார் போன்ற போர் விமானங்களை மேம்படுத்த, பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மிக் -29 ரக விமானங்களை மேம்படுத்துவது 2016ம் ஆண்டிற்குள்ளும், மிரேஜ் - 2000 ரக விமானங்களை மேம்படுத்துவது 2021க்குள், ஜாகுவார் ரக விமானங்களை மேம்படுத்துவது 2017ம் ஆண்டிற்குள்ளும் முடிவடையும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.

No comments:

Post a Comment