Monday, April 30, 2012

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண tna விரும்புமாயின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும்-நிமால் சிறிபால டி சில்வா!

Monday, April, 30, 2012
இலங்கை::பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புமாயின் உடனடியாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமது கட்சியின் பிரதிநிதிகளை பெயரிட வேண்டும். சபாநாயகரைத் தொடர்பு கொண்டு இதனை முதலில் செய்ய வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் இடம் பெறாது ஆளும் கட்சியும் தமிழ்த் ளூதசியக் கூட்டமைப்பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தும் இடமே பொருத்தமானதாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு ஒன்றை நாட்டுக்குள்ளேயே காண்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தடங்கல் நிலைக்கு சென்றுள்ளமைக்கு நாங்கள் காரணமல்ல. நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகவே இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் அல்லது தயார் எனின் அவர்கள் முதலில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தங்கள் கட்சியின் பிரதிநிதிகளின் பெயர்களை வழங்குவதாகும்.

சபாநாயகரைத் தொடர்புகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் இ தனை செய்யவண்டும். அதாவது கூட்டங்களில் கலந்துகொண்டு இவ்வாறு பேச்சுகள் மூலம் தீர்வுகாண நாங்கள் தயார் என்று கூட்டமைப்பு கூறுவதில் அர்த்தம் இல்லை.

மாறாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவண்டும். இந்நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறாத நிலையில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றே கருதுகின்றோம்.

அதாவது ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்து பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. மாறாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து ளூபச் நடத்தி அரசியல் தீர்வைக் காண முன்வரவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி என பல கட்சிகள் பாராளுமன்றத்தில் உள்ளன. அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டே இணக்கப்பாட்டுக்கு வரவவேண்டும்.

இது இவ்வாறு இருக்க இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய எதிர்க்கட்சி தலைவி ஷ்மா வரா ஜúம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment