Friday, April 20, 2012

சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கான விஜயம்!

Friday, April, 20, 2012
இலங்கை::இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் கலந்துரையாடினர்.

இன்று காலை, ஹட்டன் நகருக்கான விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இந்திய நாடாளுமன்ற குழுவினருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்ட இந்திய குழுவினர், வந்தாறுமூலையிலுள்ள தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டனர்.

இந்த வைபவத்தில் இந்திய குழுவினருடன் அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment