Monday, April 30, 2012

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை விஜயம்!

Monday, April, 30, 2012
இலங்கை::ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்

இந்தக் குழுவில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் ஐந்தாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் வகையிலேயே ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாட்டில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாத்திலக்க அமுணுகம குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment