Monday, April 30, 2012

இலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி)கருணாநிதி பேட்டி!

Monday, April, 30, 2012
2-ம் சென்னை::இணைப்பு இலங்கை தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான்-இந்திய இறையாண்மையை நேசிக்காத துரோகி,(புலி பினாமி) கருணாநிதி பேட்டி!

(புலி ஆதரவு பிரிவினைவாதி) கருணாநிதி பேட்டி

சென்னை: இலங்கை தமிழர் உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட டெசோ அமைப்பின் முதல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. டெசோ அமைப்பின் உறுப்பினர்களான க.அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இலங்கை தமிழர் பிரச்னை தீர்வுக்கு தனி தமிழீழம் அமைவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உலக நாடுகள் உணர செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழீழம் விரைவில் அமைய ஐ.நா. மன்றம், தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு விரைவில் நடத்த வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

பின்னர் கருணாநிதி அளித்த பேட்டி:

ஆட்சியில் இல்லாதபோது, இந்த அமைப்பை தொடங்குவதாக கூறுகிறார்களே?

ஆட்சியில் இருக்கும்போதும், இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களை கொன்றதால் இந்திய அமைதி படையை வரவேற்க மறுத்த முதல்வர் நான்தான். ஜனநாயக ரீதியில் அறவழியில்தான் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

ஏ.கே.அந்தோணியிடம் தமிழீழம் பற்றி பேசினீர்களா?

என்னென்ன பேசினோம் என்று சொல்ல இயலாது.

மத்திய அரசு உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருமா?

முயற்சிக்கிறோம். முயற்சி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இலங்கை பற்றிய தீர்மானத்தை எல்லா நாடுகளும் ஆதரித்தபோது, இந்தியா சற்று தாமதமாக முடிவெடுத்தது. இந்திய அரசின் ஒப்புதலை உருவாக்கியது திமுகவின் முயற்சி என்பதை மறந்து விடக்கூடாது.

இந்தியாவுக்கு எப்படிப்பட்ட ஜனாதிபதியை எதிர்பார்க்கிறீர்கள்?

நல்ல ஜனாதிபதியை.

ஏ.கே.அந்தோணி உங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர் பெயரை கூறினாரா?

சொன்னார். உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.

நீங்கள் பெயர்களை கூறினீர்களா?

நானும் கூறினேன். அதையும் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

No comments:

Post a Comment