Saturday, March 31, 2012

LLRC யின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் உள்ளது - பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Saturday, March, 31, 2012
இலங்கை::நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர் உதவிகளுக்காக அவர், அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் அபிவிருத்திகளை பார்வையிடுமாறும் கோத்தபாய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment