Saturday, March 31, 2012

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக -வாக்களித்த நாட்டுத் தூதுவர்களை அழைத்து ஆலோசனை - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானம்!

Saturday, March, 31, 2012
இலங்கை::ஜெனிவா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராகவும் யோசனைக்கு ஆதரவாகவும் வாக்களித்த 24 நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களை இலங்கைக்கு அழைத்து, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில் சித்திரை புத்தாண்டு காலத்தில், இலங்கை செல்லவுள்ள இந்த தூதுவர்கள், தனித்தனியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சுவிஸர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், இந்தியா, ஹங்கேரி, செக், போலாந்து, மோல்டோவா, ருமேனியா,பெல்ஜியம், இத்தாலி, ஒஸ்திரியா, மொஸ்கோ, பெரு, உருகுவே, கொஸ்டரீகா, கௌதமாலா, சிலி, நைஜீரியா, பேனின், லிபியா, மொரிசியஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை தூதரங்கள் இல்லாத நாடுகளிலும் தூதுவர்களாக பணியாற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment