Saturday, March 31, 2012

ஏ.கே. அந்தோணி பதவி விலக வேண்டும்: பாரதீய ஜனதா வலியுறுத்தல்!

Saturday, March, 31, 2012
புதுடெல்லி::ராணுவத்துக்கு தத்ரா நிறுவனத்திடமிருந்து லாரிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவத்கர் ஒரு பிரச்சினையை எழுப்பினார்.

அப்போது அவர் பேசும்போது, தத்ரா நிறுவனத்திடமிருந்து ராணுவத்துக்கு லாரி வாங்கியது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக விசாரணை முடியவில்லை.

அப்படியென்றால் ஊழலை மூடி மறைக்க அரசும், ராணுவ மந்திரியும் முயற்சிக்கிறார்களா? ஊழலுக்கு ஆதரவு தருகிறபோது பதவியில் தொடர உரிமை இல்லை. ராணுவ மந்திரி பதவி விலக வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

இந்தப் பிரச்சினையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே விசாரணை நடத்துமாறு கூறி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணிக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியதையும் பிரகாஷ் ஜாவத்கர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment