Wednesday, March 21, 2012

ஆட்டுப்பட்டித் தெருவில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்!

Wednesday,March,21,2012
இலங்கை::கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் இரண்டு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றுக்கு அருகில் வைத்து நேற்று மாலை வேன் ஒன்றில் வந்தவர்களால் இரண்டு பேரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர்கள் இருவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment