Wednesday,March,21,2012இலங்கை::அமெரிக்காவின் சீஐஏ புலனாய்வு முகவர் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்:-
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட சூழ்ச்சி தற்போது வெளிப்பட்டுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அதன் தலைவர் குணதாஸ அமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை போலவே, இந்தியாவும் இலங்கையை அடிமைப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவின் இந்த தீர்மானம் குறித்து அதிர்ச்சியடைய வேண்டியதில்லை
கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா திரைமறைவில் மேற்கொண்டு வந்த திட்டமே தற்போது வெளிப்பட்டுள்ளதாக சுட்டிக்காடடினார்.
அமெரிக்காவை போலவே, இந்தியாவும் தமது வல்லரசு ஆதிக்கத்துக்குள், இலங்கையை துண்டாக்கி, அதனை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே முற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அமெரிக்காவின் சீஐஏ புலனாய்வு முகராக செயற்பட்ட இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும், இந்த சூழ்ச்சியில் உட்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இத்தாலிய பெண் என்பதுடன், மன்மோகன் சிங் ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்.
அவர்கள் இருவரும் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ எனப்படும் காவற்துறை ஒற்றர் குழுவின் முகவர்களாக செயற்பட்டுவருவதாக குணதாஸ அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
காந்தி, நேரு போன்ற நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், இலங்கைக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment