Wednesday, February 29, 2012

இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Wednesday,February,29,2012
இலங்கை::இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இனவாத அடிப்படையில் செயற்படவில்லைஎன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான படுகொலைகள், சட்டவிரோத கைதுகள் எதனையும் படையினர் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராவய பத்திரிகையின் 25ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1971, 1989-90 கிளர்ச்சி மற்றும் 30 ஆண்டுகால பயங்கரவாதம்ஆகியன மூலம் நாட்டு மக்களுக்கு இரத்தத்தையும் கண்ணீரையும் மட்டுமே பெற்றுக் கொண்டதாகக்குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பினர் இலங்கைக்கு எதிராக செயற்படமுயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment