Wednesday, February 29, 2012

புலம்பெயர் புலிகளின் திட்டத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்-கோத்தபாய ராஜபக்ஸ!

Wednesday,February,29,2012
இலங்கை::இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை தூக்கிப்பிடிக்கும் சர் வதேச சக்திகளுடன் இணைந்து தனி ஈழத்தைப் பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் புலிகள் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று; பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார

மேற்கத்தேய சக்திகளின் பிரிவினைவாத நோக்கத்தை முறியடிப்பதற்கு ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன.

நாட்டில் மலர்ந்துள்ள சமாதானத்தைப் பிடுங்கி எடுப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை, உலகில் முறியடிக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்துக் காட்டியவர்கள் நாங்கள்.புலிகள் வீழ்ச்சியுற்றபின்னர் வடக்கில் தனியான ஆட்சி அலகொன்றை அமைப்பதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன.

மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து, வடக்கு, கிழக்கு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுத்த இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது மீண்டும் பிரிவினைவாத, தீவிரவாதத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாகும் எனவும் அவா கூறியுள்ளார

No comments:

Post a Comment