Tuesday, February 28, 2012

அமெரிக்காவில் பயங்கரம் பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவன் பரிதாப சாவு!

Tuesday, February 28, 2012
சார்டன்::அமெரிக்காவின் ஓஹியோவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் உள்ளது சார்டன் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி. இங்கு நேற்று காலை பள்ளி தொடங்குவதற்கு முன் மாணவ, மாணவிகள் கேன்டீனில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த மாணவன் ஒருவன் திடீரென மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதை பார்த்து மாணவர்கள் அலறிக் கொண்டு ஓடினர். சிலர் தொடக்க பள்ளிக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். காயம் அடைந்த மாணவர்களை உடனடியாக கிளவ்லேண்ட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்தான் என்று போலீஸ் தலைவர் திமோதி கூறினார். சம்பவத்தை நேரில் பார்த்த மாணவி ஹீத்தர் ஜிஸ்கா (17) கூறுகையில், ÔÔநாங்கள் காலை 7.30 மணிக்கு கேன்டீனில் இருந்தோம். அப்போது அந்த மாணவன் கோபமாக வந்தான். திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். அனைவரும் சிதறி ஓடினார்கள்ÕÕ என்று மரண பீதியுடன் கூறினார். போலீஸ் தலைவர் திமோதி கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் சிறுவன் என்பதால், அவனுடைய பெயர் வெளியிடப்படவில்லை. எனினும் அவன் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடக்கிறதுÕÕ என்றார். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment