இலங்கை::மாவத்தகம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார்.
இவர் இன்று அதிகாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இந்த இளைஞன் தனது வீட்டில் இருந்த போது, பொலிஸார் எனக்கூறி வந்த இருவர் அவரை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
குறித்த இருவரும் வாகனமொன்றில் வருகை தந்துள்ளதுடன், கடத்தப்பட்ட இளைஞன் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment