Wednesday, February 29, 2012

கார்த்திக் கட்சி ‘காமெடி’ ஆரம்பம் மனு தாக்கல் செய்யும் பெண் கட்சியிலேயே இல்லையாம்!

Wednesday,February,29,2012
நெல்லை::சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் சுப்புலட்சுமி என்ற பெண் போட்டியிடுவதாக கூறி சங்கரன்கோவில் தாலுகா அலுவகத்தில் வேட்புமனுவை பெற்று சென்றார். இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக சுப்புலட்சுமி கூறினார். இந்நிலையில் சுப்புலட்சுமிக்கும், நாடாளும் மக்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று அக்கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் வேதாந்தம் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் கார்த்திக் அறிவித்தபடி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக கூறிவிட்டோம். இந்நிலையில் சுப்புலட்சுமி தனித்து போட்டி என்றும், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் கூறி உள்ளார். அவருக்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இதுபற்றி தலைவர் கார்த்திக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment