Sunday, February 12, 2012சேலம்:.சேலத்தில், இலங்கை துணைத் தூதரை தாக்க முயன்ற, தமிழக மக்கள் உரிமை சங்கத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது!
சேலத்தில், இலங்கை துணைத் தூதரை தாக்க முயன்ற, தமிழக மக்கள் உரிமை சங்கத்தை சேர்ந்த, இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, இலங்கை தமிழர்களுக்கான பிறப்புச் சான்று வழங்கும் முகாமில் கலந்து கொள்ள, இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தூதரக அலுவலர்கள் வந்திருந்தனர். அப்போது, கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த, தமிழக மக்கள் உரிமை சங்கத்தை சேர்ந்த பூமொழி, காமராஜ் ஆகியோர், துணைத் தூதரை கண்டித்து தாக்க முயன்றனர். இது தொடர்பாக, போலீசார், வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
No comments:
Post a Comment