Tuesday, February 28, 2012

ஜெயலலிதா பேனர் கிழிப்பு அதிமுக கவுன்சிலர்-வட்ட செயலாளர் மோதல் : சோடா பாட்டில் வீச்சு ஓட்டேரியில் பரபரப்பு!

Tuesday, February 28, 2012
பெரம்பூர்::முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டேரியில் ஜெயலலிதா படத்துடன் கூடிய பேனர்களை மாநகராட்சி 75வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்தான கிருஷ்ணன் வைத்திருந்தார். இந்த பேனர்களில், அதே வார்டு வட்ட செயலாளர் பாண்டியன் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 2 பேனர்களை கிழித்தனர். இது சந்தான கிருஷ்ணனுக்கு தெரிந்தது. இந்நிலையில், நேற்று மாலை, செல்லப்பா முதலி தெருவுக்கு சந்தான கிருஷ்ணன், சிலருடன் வந்தார். அப்போது, பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் அங்கு வந்தனர். ‘எதற்காக பேனரை கிழித்தாய்Õ என்று சந்தான கிருஷ்ணன் கேட்டார். ‘அப்படித்தான் கிழிப்பேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்Õ என்று பாண்டியன் கூறியுள்ளார். அதோடு ஜாதி பெயரையும் கூறி தகராத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை சந்தான கிருஷ்ணனுடன் இருந்த திருவிக நகர் சிறுபான்மை செயலாளர் ஆண்ட்ரூஸ் தட்டி கேட்டுள்ளார். வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து, ஆண்ட்ரூஸ், பிரபா ஆகியோரை சோடா பாட்டில் வீசி தாக்கினர். பதிலுக்கு அவர்களும் தாக்கினர். இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் ஓட்டேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார், அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சந்தான கிருஷ்ணனுக்கு வெற்றிவேல் எம்எல்ஏவும், பாண்டியனுக்கு நீலகண்டன் எம்எல்ஏவும் ஆதரவாக பேசினர். இதில் சமாதானம் ஏதும் ஏற்படாததால் நாளை (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி புளியந்தோப்பு உதவி கமிஷனர் லோகநாதன் கூறி அனுப்பி வைத்தார். இந்த மோதல் சம்பவத்தால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment