Wednesday, February 1, 2012

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியது இலங்கை படை!

Wednesday,February,01,2012
ராமேஸ்வரம்::கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற மீனவர்களை, நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் பலர் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன்பிடித்ததால்தான் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், இதனால் போதிய மீன்பாடு இல்லை என்றும் கரை திரும்பிய ஒற்றைமடி மீனவர்கள் தெரிவித்தனர். மீனவ சங்க பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது: கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி வலையினால் மீன்பிடிக்கவும், கழிவு நீர் வழிய வாகனங்களில் மீன்களை ஏற்றிச்செல்லவும், தடை இருந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மீன்வளம் அழிவதுடன், ஒற்றைமடி, கரைவலை, நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment