Tuesday, February 28, 2012

இலங்கை நாட்டின் 14 ஆவது குடிசன மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்: முதலாவது கணக்கெடுப்பில் ஜனாதிபதியின் குடும்பம்!

Tuesday, February 28, 2012
இலங்கை::நாட்டின் 14 ஆவது குடிசன தொகை மதிப்பீட்டுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

முதலாவது மதிப்பீட்டுக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது குடும்பம் இணைத்துக் கொள்ளப்பட்டு குடும்ப உறுப்பினர்களது விபரங்கள் திரட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட மேற்படி மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பரிச்சயமிக்க அதிகாரிகள் நாட்டின் ஒவ்வொரு வீடுகளுக்கும் வருகை தந்து தகவல்களைத் திரட்டவிருப்பதாகவும் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மதிப்பீட்டுப் பணிகளை கண்காணிக்கும் வகையில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட 16 ஆயிரம் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, பயிற்சி வழங்கப்பட்ட 80 ஆயிரம் அதிகாரிகளும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment