இலங்கை::சர்வதேச நாணய நிதியத்தினால் கடனாக வழங்கப்பட்ட இருநூற்று 60 கோடி அமெரிக்க டொலர்களில், 80 கோடி அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொள்ளப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையினை மீள பெறுவதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான பேச்சு வார்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இதுவரையில் பெறப்பட்ட கடன்தொகைக்குறிய வட்டியாக ஒன்று தசம் ஒன்று சதவீத வட்டி சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
மிகுதியாக பெறப்படவுள்ள கடன் தொகைக்கான வட்டி வீதம் தற்போது மூன்று சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் இந்த அதிகரிப்பு 400 சதவீத வட்டி அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்தை நடத்தி இலங்கைக்கு சார்பான முறையில் மிகுதியாக கடனை பெற மத்திய வங்கி நடடிவக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment