இலங்கை::மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் பகல்வேளையில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்துக்கொள்ளையிட்டுவரும் சம்பவம் பல இடம்பெற்ற நிலையில்
நேற்றுப் பகல்பூம்புகார்ப் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டின் யன்னலை உடைத்துநகை மற்றும்பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.294000 ரூபா பெறுமதியான நகையும் 3000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளையினைப் பிடிப்பதற்கு மட்டக்களப்புப் பொலிஸ் நிலைய குற்றப்புலன்விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர்போப்பநாயுடன் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.மட்டக்களப்பில் அண்மைக் காலமாக இடம்பெற்ற வரும் பகல் கொள்ளை தொடர்பாகமட்டக்களப்புப் பொலிஸார் தெரிவிக்கையில் ஆட்கள் இல்லாத வீடுகளிலேயே இக்கொள்ளை இடம்பெற்று வருவதாகவும் வீட்டைப் பூட்டிவிட்டுப் போகும் போது அயல்வீட்டாரிடம் தெரிவித்து விட்டுப் போகும் படியும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment