Friday, January 6, 2012

புலிகளின் முத்திரைகளை வெளியிட்டமைக்காக பிரான்ஸ் தபால் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளது:பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது:பிரான்ஸ்!

Friday, January 06, 2012
இலங்கை::பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. எந்த வகையிலான பயங்கரவாதத்திற்கும் இடமளிக்கப் போவதில்லை என பிரான்ஸ் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

புலிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகளை வெளியிட்டமைக்காக பிரான்ஸ் தபால் திணைக்களம், அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளது.

சகல விதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் பிரான்ஸ் வன்மையாகக் கண்டிப்பதாக, தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment